ஆறாவது அத்தியாயம் |
(ஆத்ம ஸம்யம யோகம்)
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத ஷஷ்டோ அத்யாய:।
ஆத்ம ஸம்யம யோகம்
(மனத்தை வசபடுத்து)
ஸ்ரீபகவாநுவாச।
அநாஷ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய:।
ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய:॥ 6.1 ॥
ஸ்ரீ பகவான் கூறினார்: செய்ய வேண்டிய செயல்களை யார் கர்மபலனை எதிர்பாராமல் செய்கிறானோ அவனே துறவி, அவனே யோகி, அக்னி சம்பந்தமான கிரியைகள் செய்யாதவனோ, செயல்களில் ஈடுபடாதவனோ இல்லை .
யம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ।
ந ஹ்யஸம்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந॥ 6.2 ॥
அர்ஜுனா ! எதை துறவு என்று சொல்கிறார்களோ அதை யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை விடாத யாரும் யோகி ஆவதில்லை.
ஆருருக்ஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே।
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஷம: காரணமுச்யதே॥ 6.3 ॥
தியான யோகத்தை நாடுகின்ற முனிவனுக்கு செயல்கள் வழி என்று சொல்லபடுகிறது. அவனே தியான யோக நிலையை அடைந்து விட்டால் செயலின்மை வழியாக அமைகிறது.
யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே।
ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே॥ 6.4 ॥
எப்போது புலன்கள் நாடுகின்ற பொருட்களில் ஒருவன் ஆசை வைப்பதில்லையோ , செயலில் பற்று வைப்பதில்லையோ, எல்லா நுண்நிலை ஆசைகளையும் விட்டுவிடுகின்ற அவன் தியானயோக நிலையை அடைந்து விட்டவன்.
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்।
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥ 6.5 ॥
உன்னை உன்னாலேயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்தாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன்.
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:।
அநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத்॥ 6.6 ॥
தன்னை வென்றவன் தனக்கு நண்பன் , தன்னை வெல்லாதவன் தனக்கு தானே பகைவன் போல் பகைமையில் இருக்கிறான்.