ஐந்தாவது அத்தியாயம் |
(கர்ம சன்யாச யோகம்)
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத பம்சமோ அத்ய:।
கர்ம சன்யாச யோகம்
(ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்பாடு)
அர்ஜுன உவாச।
ஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஷம்ஸஸி।
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஷ்சிதம்॥ 5.1 ॥
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! செயல்களை விடுவது பற்றியும் சொல்கிறாய், அதே வேளையில் கர்மயோகம் செய்வது பற்றியும் சொல்கிறாய். இவற்றுள் எது சிறந்தது என்று எனக்கு நன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளதோ அந்த ஒன்று எனக்கு சொல்வாய்.
ஸ்ரீபகவாநுவாச।
ஸம்ந்யாஸ: கர்மயோகஷ்ச நி:ஷ்ரேயஸகராவுபௌ।
தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே॥ 5.2 ॥
ஸ்ரீ பகவான் கூறினார்: செயல்களை விடுவது, கர்மயோகத்தில் ஈடுபடுவது ஆகிய இரண்டும் உயர்ந்த பலனை அளிப்பவை தான். அவற்றுள் செயல்களை விடுவதை விட கர்மயோகம் சிறந்தது.
ஜ்ஞேய: ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி।
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே॥ 5.3 ॥
பெருந்தோள் உடையவனே ! யார் வெறுப்பதும் விரும்புவதும் இல்லையோ அவனே மிக உயர்ந்த துறவி. ஏனெனில் இருமைகள் அற்றவன் பந்தத்திலிருந்து எளிதில் விடுபடுகிறான்.
ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:।
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்॥ 5.4 ॥
செயல்களை விடுவது, செயல்களில் ஈடுபடுவது இரண்டும் வெவ்வேறானவை என்று பக்குவம் பெறாதவர்கள் பேசுகிறார்கள். அறிவாளிகள் அவ்வாறு பேசுவது இல்லை. இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் உரிய முறையில் கடைபிடித்தவன் இரண்டையும் பின்பற்றிய பலனை அடைகிறான்.
யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே।
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 5.5 ॥
செயலை விடுபவர்கள் அடைகின்ற நிலையை கர்மயோகிகளும் அடைகிறார்கள். செயலை விடுவது, செயலில் ஈடுபடுவது இரண்டையும் ஒன்றாக யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.
ஸம்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:।
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி॥ 5.6 ॥
பெருந்தோள் உடையவனே ! செயல்களில் ஈடுபடாமல் செயல்களை விடுகின்ற நிலையை அடைவது கடினமானது. செயல்களில் ஈடுபடுகின்ற சாதகன் விரைவில் இறைவனை அடைகின்றான்.