பதினொன்றாவது அத்தியாயம் ( |
விஷ்வரூபதர்ஷந யோகம்)
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத காதஷோ அத்யாய:।
விஷ்வரூபதர்ஷந யோகம்
(வாழ்க்கையின் மறுப்பக்கம்)
அர்ஜுன உவாச।
மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்।
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோ அயம் விகதோ மம॥ 11.1 ॥
அர்ஜுனன் கூறினான்: மேலான, ரகசியமான ஆத்மதத்துவத்தை பற்றி நீ கூறியருளியதால் எனது மனமயக்கம் போய்விட்டது.
பவாப்யயௌ ஹி பூதாநாம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா।
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்॥ 11.2 ॥
தாமரை இதழ் போன்ற கண்களை உடையவனே ! உயிர்களின் பிறப்பு இறப்பு பற்றியும் உனது எல்லையற்ற மகிமை பற்றியும் உன்னிடமிருந்தே நான் விரிவாக தெரிந்துகொண்டேன்.
ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஷ்வர।
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஷ்வரம் புருஷோத்தம॥ 11.3 ॥
பரமேசுவரா ! நீ உன்னை பற்றி சொன்னவை அனைத்தையும் அப்படியே உண்மை. புருஷோத்தமா ! இனி உனது தெய்வ வடிவை நான் காண விரும்புகிறேன்.
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ।
யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மாநமவ்யயம்॥ 11.4 ॥
எம்பெருமானே ! யோகேசுவரா ! அந்த தெய்வ வடிவத்தை காண நான் தகுதி பெற்றவன் என்று நீ கருதினால் அழிவற்ற அந்த உனது வடிவை எனக்கு காட்டி அருள்வாய்.
ஸ்ரீபகவாநுவாச।
பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோ அத ஸஹஸ்ரஷ:।
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச॥ 11.5 ॥
அர்ஜுனா ! பலவிதமான, தெய்வீகமான பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது உருவங்களை நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக பார்.