சுப நிகழ்ச்சிகளை அமாவாசை அன்று துவங்கலாமா? |
1. சுப நிகழ்ச்சிகளை அமாவாசை அன்று துவங்கலாமா?
• சுப நிகழ்ச்சிகளுக்கு அமாவாசை ஏற்ற நாள் அல்ல.
• அமாவாசை பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர்களின் வழிபாட்டிற்கு சிறந்தது.
• அமாவாசையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம் மற்றும் வேள்விகள், தான தர்மங்களை செய்யலாம்.
2. புதிய ஆடைகளை எந்தெந்த கிழமைகளில் அணியலாம்?
• புதிய ஆடைகளை ஞாயிறு, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அணிவது உத்தமம்.
• மேலும், பண்டிகை மற்றும் திருவிழாக்கள் எந்த நாட்களில் வந்தாலும் அணிந்து கொள்ளலாம்.
• துவிதி, திருதி, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரியோதசி போன்ற திதிகளில் புதிய ஆடைகளை அணியலாம்.
3. எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் நல்லது?
பசு நெய் :
சகல செல்வங்களும், சுகங்களும் கிடைக்கும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
நல்லெண்ணெய் :
மகாவிஷ்ணுவின் அனுக்கிரஹம் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் :
கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யமும், அன்பும் நீடிக்கும்.
வேப்பெண்ணெய் + நெய் + இலுப்பெண்ணெய் : இவை மூன்றையும் சேர்த்துப் பயன்படுத்தினால் முன் ஜென்மபாவம் நீங்கும்.
விரும்பியது கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டுக்கு நல்லது.
தேங்காய் எண்ணெய் :
விநாயகருக்கு உகந்தது.