வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலக |
தீய சக்திகள் என்றால் என்ன?
மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், எதிர்மறை ஆற்றலையே (நெகடிவ் எனர்ஜி) தீய சக்திகள் என்று கூறுகிறோம். கிருமிகளின் தாக்குதலையும் தீய சக்தி தாக்குதலாகவே தமிழர்களின் பண்பாட்டின் படி கருதப்பட்டுள்ளது. வாஸ்து அளவுகளில் மாற்றம் இருந்தாலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உண்டாகும். இது தவிர கண் திருஷ்டி, பொறாமை, மாந்திரீகம் போன்றவைகள் எதிர்மறை எண்ண அலைகள் மூலம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டில் உள்ள தீய சக்திகளான எதிர்மறை ஆற்றலை நீக்குவதன் மூலம் குடும்பத்திற்கு நன்மையும், நமது உடலில் உள்ள ஆரா சக்தியின் நேர்மறை ஆற்றல் அளவு பாதிப்பு அடையாமல் பாதுகாக்கபடும், அத்தோடு உடல் ஆரோக்கியமும், குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலையையும் விலக்கி நிம்மதி, முன்னேற்றம், தொழில் விருத்தி , மனம் அமைதி போன்றவடற்றை உண்டாக்கும், வீட்டில் தெய்வம் குடிகொள்ளும். நோய்கள் விலகி உடல் பூரண குணமாகும்.
உடலில் உள்ள ஆரா சக்தி பாதிப்பு அடையாமல் இருக்க
மனித உடலில் உள்ள ஆரா சக்தி பற்றி சென்ற பதிவில் கூறி இருந்தோம், அத்தகைய ஆற்றல் கொண்ட ஆரா சக்தியை அதிகபடுத்த விரும்புவர்கள் மற்றும் தற்சமயம் உடலில் உள்ள ஆரா சாக்தியின் நேர் மறை ஆற்றல் குறையாமல் இருக்கவும், அவ்வாற்றல் வீட்டில் உள்ள எதிர் மறை சக்தியால் பாதிப்பு அடையாமல் இருக்கவும் கீழே கொடுக்கபட்ட "வீட்டில் எதிர் மறை ஆற்றல் நீங்க" என்னும் தலைப்பின் முறையை பின் பற்றினால் போதும். உடலில் அதிகபடுத்தபடும் ஆரா சக்தியின் நேர் மறை ஆற்றல் பாதிப்படையாமல் இருக்கும்.
கணபதி ஹோமம்
வருடம் தவறாமல் கணபதி ஹோமம் செய்து வந்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள், பில்லி, சூனியம், மாந்திரீக செயல்கள், எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை சக்தி அதிகரிக்கும். இதற்க்கு முறையாக கணபதி ஹோம மந்திரங்களை கற்ற மாந்திரீகர்களை வைத்து செய்வது சிறப்பு.
மூலிகை சாம்பிராணி
வெண்கடுகு, சாம்பிராணி, விஷ்னுகிரந்தி, கோரோஜனை,நொச்சி இலை போன்ற மூலிகைகளை சேர்த்து வீட்டில் மூலிகை சாம்பிராணி புகைக்க வீட்டில் உள்ள தீயவைகள் விலகி நன்மைகள் உண்டாவது உறுதி.
கல் உப்பு
வீட்டின் தரையை கல் உப்பு கலந்த கரைசலால் சுத்தம் செய்யவும். இதனால் எதிர் மறை சக்தியான தீய சக்தி நீங்கும். கல் உப்பிற்க்கு எதிர் மறை சக்திய ஈர்க்கும் ஆற்றல் அதிகம்.
மூலிகை வாசனை
வீட்டின் உட்புற பகுதியில் மனதிற்கு இனிமையான வாசனை இருக்கும்படி செய்யவும் இதற்கு இயற்கை மூலிகை வாசனை பொருட்களை பயன்படுத்துங்கள்.
வீட்டு பொருட்கள்
நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள பொருட்களை உங்கள் மனதிற்கு பிடித்தபடி அமையும் வரை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.
வரிகுமட்டி காய்
அம்மாவசை, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் வரி குமட்டிகாய் பச்சை காயாக எடுத்து வந்து நான்கு பாகமாக வெட்டி அதில் சிகப்பு தடவி வீட்டில் உள்ள நபர்களையும், வீட்டையும் சுற்றி போட துர்சக்திகள், துர்தேவதைகள், பேய், பிசாசு, தீய சக்திகள் விலகி போகும்.
சூரிய வெளிச்சம்
சூரிய உதயத்தின் வெளிச்சம் வீட்டினுள் படுவதால் எதிர்மறை சக்திகள் விலகி. சூரிய வெளிச்சம் வழியாக ஊடுருவி வருகின்ற சக்தி நன்மை உண்டாக்கும் நேர்மறை ஆற்றல் வீட்டில் பரவும். காலை நேரத்தில் ஜன்னல், கதவுகளை திறந்து வையுங்கள்.
சாம்பல் பூசனி
சாம்பல் பூசனிகாய் வாங்கி அதில் துளையிட்டு சிகப்பு போட்டு துளையை மூடி பொரிய கற்பூர வில்லை அதன் மேல் வைத்து பற்றவைத்து வீட்டை ஒரு முறை சுற்றி வந்து முச்சந்தியில் உடைக்க தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல், கண்திருஷ்டி எல்லாம் விலகி போகும்.
தெய்வீக தன்மை
தூங்கும் அறை பிரகாசமாகவும், தெய்வீக தன்மை பொருந்தி இருத்தல் வேண்டும். முடிந்த வரை சுத்தமாகவும், கலைந்த உடைகளை அப்புறபடுத்தி வைக்கவும். அறை முழுவதும் வெண்மை நிறமாகவும், பொருட்கள் அழகவும், வரிசையாகவும் வைக்கவும். இதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.
கல் உப்பு கரைசல்
கல் உப்பு 50 கிராம் எடுத்து ஒரு பீங்கான் பாத்திரத்தில் போடு 100 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து வீட்டில் ஏதாவது ஓரிடத்தில் வைத்துவிட எதிர்மறை ஆற்றலை ஈர்த்து கொள்ளும். அவ்வப்போது மாற்றி வைக்கவும்.
எலுமிச்சை பழம்
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க எதிர்மறை சக்தியை தடுக்கும்.
ஆகாச கருடன் கிழங்கு
வீட்டின் நுழைவு வாயிலின் மேல் உட்புறமாக ஆகாச கருடன் கிழங்கை கட்டிவைக்க உள் நுழையும் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து கொள்ளும். அல்லது தடுத்து நிறுத்தும் சக்தி இதற்கு உண்டு.
படிகார கல்
படிகார கல் வாங்கி வீட்டின் நுழைவு வாயிலில் கட்டி வைக்க படிகார கல் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து கரைந்து போகும். படிகார கல் கரைந்து சிறியதாகும் போது மாற்றி வைக்கவும்.
கற்றாழை
கற்றாழை வீட்டின் வெளி புறத்தில் சனி மூலையில் (ஈசானிய மூலை) கட்டி வைக்க எதிர்மறை ஆற்றல் வீட்டினுள் நுழைவது தடுக்கப்படும்.
பஞ்ச தீபம்
ஐந்து எண்ணை கொண்டு தயாரிக்கபட்ட பஞ்ச தீப எண்ணையால் வீட்டில் விளக்கு ஏற்ற தீப ஒளியானது எதிர்மறை சக்தியை கிரகித்து நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.
மிளகாய், எலுமிச்சை
ஓர் சிறி கயிற்றில் பச்ச மிளகாய், எலுமிச்சை மற்றும் கரிதுண்டை கட்டி வாசலின் முன்பு கட்டிவைக்க நெகடிவ் எனர்ஜி வீட்டினுள் செல்வது தடுக்க படும். வாகனத்தின் உட்புற பகுதியில் கட்டிவைக்க ஓட்டுனர்க்கு எதிர்மறை ஆற்றலால் உண்டாகும் உடல் சோர்வு நீங்கும். மற்றும் மிளாகாயில் இருந்து வெளிப்படும் இரசாயணத்திற்கு தூக்கத்தை போக்கும் தன்மை உண்டு.
மருதானி இலை
மருதானி செடியின் இலைகளை கொத்தாக ஒடித்து வந்து வீட்டின் வாசற்படிக்கு மேல் வைக்க தீய சக்திகள் உள் வராது. பில்லி, சூனியம், மை, மந்திரம் செயல் இழந்து போகும்.
அழுக்கு துணிகள்
அதிகம் பயன்படுத்தும் அறையில் அழுக்கு துணிகளை வைக்காதீர்கள், அழுக்கு துணிகளுக்கு அதிக எதிர் மறை சக்தியை உண்டாக்கும் தன்மை உண்டு.
பசுவின் சாணம்
வீட்டின் தரை பகுதியை பசுவின் சாணக் கரைசலால் துடைப்பதனால் அதிலிருந்து வெளி வரும் வாசனை மனதிற்கு ஒரு வித அமைதியும், நிம்மதியும் உண்டாக்கும், தெய்வீக தன்மையை உண்டாக்கி, நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து நேர்மறை ஆற்றலை வளர்க்கும்.
பசுவின் கோமியம்
பசுவின் கோமியத்திலும் எதிர்மறை சக்தியை விலக்கும் தன்மை அதிகம் உண்டு அத்துடன் நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு.
பசுவின் கோமியம் பயன்படுத்தும் முறை
காலையில் பசுவின் கோமியத்தை பிடித்து ஒரு செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிடவும். 3 மணிநேரம் கழித்து மா இலை 5 எடுத்து. கோமியம் உள்ள பாத்திரத்தில் போட்டு வீடு முழுவதும் தீர்தம் தெளிப்பது போல் தெளிக்கவும் மீதம் உள்ளதை வீட்டின் மேற்பகுதியிலும் வீட்டை சுற்றிலும் தெளிக்கவும்.
இறங்கள் வீடு, மருத்துவமனை
இறந்தவர்கள் வீட்டிற்க்கு சென்று வந்தவுடன் குளித்து விட்டு வீட்டினுள் செல்லுங்கள். இறப்பு நிகழ்ந்த வீட்டிலும், அங்கு வருபவர்களின் மனதிலும் எதிர் மறை சக்தியானது நிறைந்து இருக்கும், இதே நிலைதான் மருத்துவமனையிலும், மேற்கூறிய இரு இடங்களும் துக்கமான சூழ்நிலையை உண்டாக்க கூடியது. இதனால் நமது உடலில் உள்ள ஆரா சக்தி பாதிப்பு அடையும், ஆரா சக்தி பாதிப்பு இன்றி பாதுகாக்க, தவறாமல் குளிப்பது மிக அவசியம்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் குப்பைகள்
சமையலுக்கு பயன்படுத்திய காய்கறிகளின் கழிவுகள், கெட்டு போன உணவு, பழங்கள், வீட்டை சுத்தம் செய்த சேர்த்த குப்பைகள் இவைகளை உடனுக்குடன் வெளியேற்றிவிட வேண்டும். இவைகளை தேக்கி வைத்தால் தரித்தரம் உண்டாகும். இதுவும் தீய சக்திகளின் வெளிபாடே.
சமையல் அறை ஓர் கோவில்
முன்பு வாழ்ந்த நம் தமிழர்கள் சமையல் அறையை கோவில் போல் பாதுகாப்பாக வைத்து இருந்துள்ளனர். தினமும் சமையல் செய்யும் முன் குளித்து, சமையல் அறையை சுத்தமாக பெருக்கி கூட்டி பின் அடுப்பை பசு சாணத்தால் மொழுகி, பொட்டு வைத்து வணங்கியபின் சமையல் செய்து வந்துள்ளனர்.
தமிழர் பழக்க வழக்கங்கள்
தமிழர் பழக்க வழக்கங்கள் அனைத்துமே பல அறிவியல் உள்ளீடுகளின் அடக்கமாக உள்ளது. இதில் சிலவற்றை விஞ்ஞான உதவியுடன் நிருபணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல கண்டறிய முடியாமல் சூட்சகமாகவே உள்ளது, இதை கண்டு விஞ்ஞானமே திகைத்து நிற்கிது. இனியாவது மேற்கூறியவற்றை மூட நம்பிக்கை என்று ஒதுக்காமல் நமது பண்பாட்டை தொடர்வோம்.