ஈசானிய மூலை என்றால் என்ன |
ஈசானிய மூலை என்றால் என்ன
வாஸ்து சாஸ்திரத்தின் படி உள்ள எட்டு திசைகளில் ஒன்று வடகிழக்கு திசையாகும். அதாவது கிழக்கு மற்றும் வடக்கு திசைக்கு இடைபட்ட பகுதியை ஈசானிய மூலை அல்லது சனி மூலை என்று அழைக்கபடுகிறது. மேலே காட்டியுள்ள படத்தில் சிவப்பு நிற பகுதி ஈசானிய மூலை.
ஜோதிட சாஸ்திரம்
ஈசானியம் என்பது வீட்டின் தலை பகுதியாக அமைகிறது. வீட்டிற்க்கு ஈசானிய மூலை சரிவர பொருத்தி விட்டால் கொட்ட காலத்திலும் நன்மையே உண்டாகும் இது அவரவர் கர்ம வினை பொறுத்து அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஈசானிய மூலை அதிபதி யார்
எட்டு திசைகளை ஒவ்வொர் தெய்வங்கள் ஆட்சி செய்கின்றன அதில் ஈசனிய மூலையை சிவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியக கருதப்படுகிறது.
ஈசானிய மூலையில் வீடு கட்டும் பணி ஆரம்பம்
வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.
ஈசானிய மூலை எப்படி அமைக்க வேண்டும்
ஈசானிய மூலை இது எடை குறைவாக சுத்தமான பகுதியாக இருக்கவேண்டும் என்பது வாஸ்து சாஸ்திர விதியாகும். வடகிழக்கு மூலை( ஈசான்யம் ) வெட்ட வெளியாக திறப்பாக இருப்பது,மனையின் அறைகளை விட தாழ்ந்து இருப்பது எல்லாவிதமான புகழ், செல்வாக்கு, செல்வம், அறிவு வருமானம் வரும் பகுதி மற்றும் நோய் நொடிகள் அனுகாது.
ஈசானிய மூலை பஞ்ச பூத ஆற்றல்
ஈசானிய மூலை வீட்டிற்க்கு நல்ல அதிர்வுகளை உண்டாகக் கூடிய இடம் ஆதாலால் ஈசானிய மூலைக்கு உரிய விதி விளக்கின் படி அதிர்வளைகள் தடைகளால் பாதிப்பு அடையாமல் அமைக்க வேண்டும்.
மழைநீர்
மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது
ஈசானிய மூலை எப்படி இருக்க கூடாது
ஈசானிய மூலை எடை அதிகமாக இருத்தல், மற்ற இடங்களை விட உயர்ந்து இருத்தல், மாடி படிகளை அமைத்தல், ஈசானிய மூலையில் உயரமான தொட்டி அமைத்தல் அல்லது அப்பகுதியை அடைத்தல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று இருப்பின் சகலவிதமான புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, அறிவு அழிந்து போகும். அம் மனையில் வாழ்வோர் சதா துக்கத்திலேயே இருப்பார்கள். ஈசான்யம் அடைபடும் வீடுகளில் காதல் திருமணம் நடைபெறும்.
ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.
ஈசானியம் கெட்டால் அம்மனையில் வாழ்பவரின் தலையில் பாதிப்புகள் உண்டாகும்.