உன் வாழ்க்கையில் யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப வேண்டாம் என்பதை தெரிந்து பழகு |
உன்னை நம்புகிறவர்களுக்காக நீ உயிரை கூட தியாகம் செய்யலாம். அவர்களுக்கு உன் அன்பு தான் பொக்கிஷம். அவர்களை ஓரு போதும் மறவாதே. அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் மட்டும் செய்யாதே. அது பாவம்.
அதை நீ எங்கு போனாலும் அந்த பாவத்தை துடைக்க முடியாது. அதை போல நீ ஓருவர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அவர்கள் பாத்திரம் இல்லாதவராக இருந்தால் அவர்களிடம் கடிந்து பேசாதே. அமைதியாக அவர்களை விட்டு விலகி விடு. ஓருவர் உனக்கு நேரம் சரி இல்லை என்று சொன்னால் அதை கண்டு கொள்ளாமல் என் போக்கில் விட்டு விடு. உனக்கான நேரத்தை படைப்பவன் நானே. அதை உனக்கு நல்லதாகவும் வெற்றி உள்ளதாகவும் மாற்றி உன் வாழ்க்கையில் என் ஆசியுடன் கூடிய அருளும் உனக்கு கிட்டும்..
🌹🌹🌹🌹
ஓம் ஸ்ரீ சாய் ராம்..
OM SAI SRI SAI JAI JAI SAI !