அன்னையர் தின வாழ்த்துக்கள்.. |
பாசத்தைப் பொழிவாள்
பலனொன்றும் வேண்டாள்
நேசத்தில் மலர்வாள்
நெஞ்சத்தில் பூத்திடுவாள்
கண்ணீரைக் கண்டால்
கலங்கித் தவித்திடுவாள்
உடல் கொஞ்சம் துவண்டால்
உயிர் வாடித்
துடித்திடுவாள்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
😊ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!😊
😊ஒரு பிடி சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!😊
😊ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!😊
😊எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்
வந்தாலும்..!😊
😊கருவறையை விடப் பாதுகாப்பான
அறையை..!😊
😊குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?😊
😊பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப்
போகிறது..!😊
😊பத்து மாதம் சுமந்தாலும்
கருவறை கனப்பதில்லை..!😊
😊வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் -😊
😊ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!😊
😊மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!😊
😊தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம்.!😊.