Gowri Panjangam 2023 - கௌரி பஞ்சாங்கம் 2023 |
கௌரி பஞ்சாங்கம் :
ஒரு நாளில் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருகின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் வெற்றி கிட்டும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்து விடலாம்
நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை தரும் அட்டவணை கௌரி பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது.
அதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது.
இனி ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி பட்டவையாக இருக்கின்றனதென்று கொடுத்துள்ள அட்டவணையில் நீங்கள் பார்க்கலாம்.
இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப முகூர்தங்களாகும். விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்தங்களாகும்.
இலாபம் :
இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். எல்லாம் லாபகரமாக முடியும்.
அமிர்தம் :
இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் கிட்டும்.
சுகம் :
இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகும்.
தனம் :
இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நல்ல லாபமும் கிட்டும்.
உத்தியோகம் :
இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் உத்தியோகம் சம்மந்தப்பட்ட காரியங்கள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு சம்மந்தப்பட்ட முயற்சிகள் செய்தால் வெற்றி கிட்டும்.
விஷம் :
இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் தோல்வி தான் கிட்டும். தேவையற்ற விவகாரங்களும், விரோதங்களும் ஏற்படும்.
சோரம் :
இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை செய்தாலும் எதாவது தடை ஏற்பட்டு நின்று போகும். பொருள்கள் அல்லது பணம் களவாடப்படும்.
ரோகம் :
இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த சுப காரியத்தையும் செய்யக் கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும். விரைவில் குணமாகாது.
இந்த கெளரி நல்ல நேரத்தோடு, ஓரையும், பஞ்சபட்சியும் அறிந்து செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம். பஞ்சபட்சி பற்றி அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.