அமாவாசையில் பிறந்தவரா நீங்கள்! |
அமாவாசையில் பிறந்தால் அவர்கள் திருடனாக இருப்பார்கள் என்று பலரும் கூறி கேட்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணங்களை அறிந்து கொள்ளலாம்.
• சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாக இருப்பர்.
• வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர்.
• ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பிறருக்கு கொடுத்து உதவும் குணம் உண்டு.
• ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பர்.
• ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் உள்ளுணர்வு மிக்கவர்களாக இருப்பர்.
• புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர்.
• ஐப்பசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.
• கார்த்திகையில் பிறந்தவர்கள் நாடாளுபவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும் இருப்பர்.
• மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போல் இருப்பர்.
• தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை அதிகம் விரும்புபவராக இருப்பர்.
• மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களது வாழ்க்கை துணையை பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.
• பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாக இருப்பர்.