வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை |
வாங்கு வதற்க்கு ஏற்ற வீடு
அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனை, வாழமாக வாழ்ந்து வேறிடம் செல்லும் குடும்பமனை, செல்வந்தரின் உபரி நிலம், தயாதிகள் நிலம் போன்ற வற்றை வாங்கி வீடு கட்டினால் செல்வமும், செழிப்பும், மனமிழ்ச்சியும் வம்ச விருத்தியும் வழங்களும் உண்டாகும்.
வாங்க கூடாத மனைகள்
வாழ்ந்து கெட்டவர் குடி இருந்த மனை வீடுகளை வாங்க கூடாது, தொழு நேயாளி, பைத்திய காரன், பரதேசம் சென்றவர் போன்றவர்களின் சொத்து, கோவிலுக்கு வழங்கிய கொடை நிலம், மானியமாக வழங்கப்பட்ட நிலம், அறக்கட்டலைக்கு சொந்தமான நிலம், துர்மரணம் நடந்த விடு, உரிமை இன்றி சுய அனுபத்தில் உள்ள நிலம் ஆகியவற்றை வாங்க கூடாது.
மாந்திரீகர்கள் வாழ்ந்த மனை, பேய் ஓட்டும் தலமாக இருந்த இடம், பாழடைந்த வீடு, எதிரிகளுக்கு உறை விடமான இடம், சப்பாத்தி கள்ளிகளை அழித்து சீர்திருத்திய இடம், பாம்பு புற்று இருந்து அதனை அழித்து கட்டிய வீடு, வாழ்ந்து முறிந்தவரின் மனை, கோர்ட் ஏலத்திற்க்கு வந்த மனைகள் போன்ற குறிப்புடைய வீடுகளையோ அல்லது நிலங்களையோ வாங்கி வீடு கட்டவோ கூடாது