தடை இல்லாமல் வீடு கட்ட வாஸ்து குறிப்பு |
வீடு கட்டுவதில் தடை
புதியதாக வீடு கட்டும் போது ஏதாவது சில காரணங்களால் சிலருக்கு தடைபட்டு நிற்க்கும். வீடு கட்ட இருக்கும் இடம் முன்பு ஒரு வேளை இடுகாடாகவோ, நரபலி கொடுத்த இடமாகவோ, புற்றுகள் இருந்து அகற்று பட்டோ அல்லது பில்லி, சூனியம், பேய் பிசாசுகள், கண் திருஷ்டிகளினால் தடை ஏற்படலாம்.
பூஜை முறை
இவ்வாறு தடை ஏற்படாமல் இருக்க வீடு கட்ட வாங்கிய கட்டுமான கற்களில் சிறிய ஜல்லிகல் ஒன்றை எடுத்து கொண்டு ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று நம்பூதிரிகளிடம் கொடுத்தால் சுவாமி ஐய்யப்பன் பாதத்தில் வைத்து ரிக் வேதத்தின் சுருக்கத்தை ஓதி பூஜை செய்து கொடுப்பார்கள்.
அந்த ஜல்லிகல்லை அஸ்திவாரத்தின் ஈசானிய மூலையில் போட்டு மூடி கட்டிடம் கட்டினால் எவ்வித பிரச்சனைகளும் இனிறி தீய சக்திகளின் தாக்குதல் இன்றி வீடு கட்டும் பனி இனிதே நிறைவேறும்.
மேற்கூறிய இம்முறை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் இன்றும் நடை முறையில் உள்ளது சரியான தேவஸ்தான நபரின் உதவியுடன் கட்டனம் செலுத்தி பூஜை செய்து வாருங்கள்.