TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி-5 |
1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது?
விடை: 1964
2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது?
விடை: தாய்லாந்து
3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது?
விடை: ஈசல்
4. நின்றபடியே தூங்கும் பிராணி எது?
விடை: குதிரை
5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
விடை: அரிசி
6. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?
விடை: குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
7. பிரமிடுகளின் பிறப்பிடம் எது?
விடை: எகிப்து
8. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: அரியானா
9. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
விடை: ஈரல்
10. மலேசியாவின் கரன்சி எது?
விடை: ரிங்கிட்
11. பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
விடை: புதுச்சேரி
12. தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
விடை: சோலன்
13. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை: ஞானபீட விருது
14. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது?
விடை: அமினோ அமிலத்தால்
15. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
விடை: திருத்தக்கதேவர்
16. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது?
விடை: ஆறுகள்
17. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது?
விடை: பஞ்சாப்
18. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம்?
விடை: உத்திரபிரதேசம்
19. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
விடை: லூயி பாஸ்டர்
20. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?
விடை: ஜி. யூ. போப்
21. ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன?
விடை: குந்தவ நாடு
22. உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?
விடை: குல்லீனியன்
23. கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது?
விடை: கவச குண்டலம்
24. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது?
விடை: தேனிரும்பு
25. உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை?
விடை: 9 பிரிவுகள்
26. சூரியனின் வயது?
விடை: 500 கோடி ஆண்டுகள்
27. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
விடை: ராஜஸ்தான்
28. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
விடை: ஐரோப்பா
29. உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
விடை: மாண்டரின்
30. மயில்களின் சரணாலயம் எது?
விடை: விராலிமலை