எங்கு தீபம் வைத்து வழிபடலாம்? |
எங்கு தீபம் வைத்து வழிபடலாம்?
தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்து விளக்கு ஏற்றலாம். இதனை ஆண்கள் செய்ய கூடாது. வீட்டில் உள்ள பெண்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்த பிறகு, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். கோவிலில் கூட்டாக தீப வழிபாடு செய்யலாம். சாமி படத்திற்கு சின்னதாக விளக்கேற்றி சுலோகம் அல்லது கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். வீட்டில் அரை மணி நேரமாவது விளக்கேற்ற வேண்டும். தேவிகளின் சுலோகம், மந்திரம் அல்லது பாடல்களை ஒலிக்கவும் செய்யலாம். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்தலாம்.
வியாபாரம் செய்யும் இடங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வறுமை நீங்கி வியாபாரம் பெருகும். பள்ளிக்கு மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.
வீட்டில் அல்லது வியாபாரம் சம்மந்தமாக ஏதேனும் தொடங்கும் பொழுது குத்து விளக்கை ஏற்ற வேண்டும். சுபகாரியங்கள் செய்யும் பொழுது வெள்ளி, பித்தளை குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் விளக்கு மற்றும் குத்து விளக்கை தவிர்த்திடுங்கள்.
குத்து விளக்கை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவார்கள். குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் தாமரை போன்று அகன்று இருப்பதை பிரம்ம அம்சம் என்றும் கூறுவார்கள். விளக்கை எப்பொழுதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்றலாம். தெற்கு நோக்கி ஏற்றுவதை தவிர்த்திட வேண்டும்.