குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் |
குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்:
ஒரு முகம் – மத்திமம்
இருமுகம் – கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்
மூன்று முகம் – குடும்ப விருத்தி உண்டாகும்
நான்கு முகம் – மனை மற்றும் கால்நடை லாபம் உண்டாகும்
ஐந்து முகம் – சகல சௌபாக்கியம் உண்டாகும்
காமாட்சி விளக்கு:
காமாட்சி விளக்கு எல்லோரின் வீட்டில் இருக்கக்கூடிய விளக்கு ஆகும். புதுமண பெண்ணுக்கு தாயார் வீட்டு சீதனமாக இரண்டு குத்து விளக்கும், ஒரு காமாட்சி விளக்கும் கொடுப்பது தமிழர் தங்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சுபப் பொருட்களில் ஒன்றாக காமாட்சி விளக்கு கருதப்படுகிறது.
பாவை விளக்கு:
பாவை என்பது பெண்ணை குறிக்கிறது. அதாவது இறைவனின் திருவுருவங்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் விளக்கை ஏந்தி ஒளி கொடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கும்.
கிளை விளக்கு:
குத்து விளக்கில் பல கிளைகள் செய்யப்பட்டு சங்கிலியால் இணைக்கப்பட்டு இருக்கும். மேல் உள்ள விளக்கின் உச்சியில் மயில், அன்னம் மற்றும் இறைவனின் வடிவங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும்.
மாவிளக்கு:
புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளுக்கு போடப்படும் விளக்கு. புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமையும் போடப்படுவது சிறப்பாகும்.
மானிடர்களுக்கு ஐம்புலன்கள் இருப்பதை போல குத்து விளக்குகளிலும் ஐம்புலன்களை நம் முன்னோர்கள் காண்பிக்கின்றனர். நம் ஒவ்வொரு புலன்களிலும் இறைவன் வாசம் செய்வதை போன்று குத்துவிளக்குகளிலும் மும்மூர்த்திகளும் தேவிகளும் வாசம் செய்வதாக நம் சான்றோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.