கரும்புச் சாறிலிருந்து கிடைக்கும் பயன்கள் |
நமக்கு சர்வ சாதரணமாக கிடைக்கும் கரும்புச் சாறிலிருந்து, பல்வேறு விதமான நோய்கள் மிக எளிதாக குணமாகுகின்றன. அவைகளை பற்றி இங்கு காணலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கரும்புச் சாறு குடித்து வர, சிறுநீரக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் பிரச்னைகள் குணமாகுகிறது
வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து தாக்குபிடித்து, புத்துணர்ச்சி கிடைக்கிறது.
வாய் தூர் நாற்றத்தை போக்கும் வலிமை கரும்புச்சாறுக்கு உண்டு. மேலும், பற்கள் வலிமை பெறுவதற்கும் கரும்புச் சாறு பெரிதும் உதவுகிறது.
கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம், நம்முடைய செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள், கரும்புச்சாறை குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கெட்ட கொழுப்பு குறைவதற்கும் உதவுகிறது.
கரும்புச்சாறு குடிப்பதால், வெயில் காலங்களில் ஏற்படும் உடல் எரிச்சல் சரியாகுகிறது.
இது மூளையின் இயக்கத்தை அதிகரிப்பதால், நமது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது
கரும்பை நசுக்கி, நமது உடலின் புண், காயம் இருக்குமு் இடங்களில் கட்டி வைத்தால், விரைவில் குணமாகும்.
நாட்டு சர்க்கரை மற்றும் தேன் , இவற்றை ஒன்றாக சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவி வந்தால், நமது முகத்தின் அழகை கொடுக்கும் பருக்களை நீக்க உதவுகிறது