குருவின் மீது நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும் |
குருவைத் துதிப்பதற்கு மிஞ்சிய செயல் வேறொன்றும் இல்லை.
குருவே மும்மூர்த்திகளின் அவதாரம்.
கலியுகவாழ்வின் கடலைத் தாண்ட குருவின் பாத சேவை என்ற படகினால் மட்டுமே முடியும்.
என்றும் குருவை பயபக்தியுடன் பூஜிப்பவர்கள் இல்லற வாழ்வின் துன்பங்களை வென்று முக்தி அடைவார்கள்.
குருவின் வாக்கு நமக்கு காமதேனுவைப் போன்றது.
அவரின் அருளால் நமக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும்.
குருவின் மகிமை மூடர்களுக்கு என்ன தெரியும்?
நீங்கள் கவலைப்படாதீர்கள் ! பயப்படாதீர்கள் ! குருவின் மீது திடநம்பிக்கை இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் !