கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள். நான் இருக்கிறேன்!. நம்புங்கள்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. |
கர்மாவை அனுபவிக்காமல் குறைக்க இயலாது. இந்த கர்ம சூத்திரம் எல்லோருக்கும் பொருந்தும். வியாதிகளும், துயரங்களும், கர்மாவின்படியே பிராப்தித்தாலும் சில முறை கர்மா, அதிர்ஷ்டத்தை தந்து மகான்களிடம் கொண்டு செல்லும். ஒன்று மட்டும் வாஸ்தவம்.
கடந்த பிறவிகளின் புண்ய பலன் இருந்தாலொழிய பாபாவின் தரிசன பாக்கியம் கிடைக்காது. விதியின் லீலா விலாசங்களை நம்மால் கூற இயலுமா? பாபாவின் லீலைகள் அற்புதமானவை.
எந்த நேரத்தில் பாபாவின் தரிசனம் கிடைத்ததோ, அந்த நேரமே வாழ்க்கையின் பொன்னான நேரம். பாபாவை தரிசிக்க போகிறோம் என்பதை ஜீவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த ஜீவர்கள் தன்னை தரிசிப்பார்கள் என்று பாபா நன்கு அறிவார். ஏன்? காலத்தின் ஓட்டம் அவரின் கண் விழிகளுக்கு நன்றாகத் தென்படும். காலத்தைக் கட்டுபடுத்துபவரும் அவரே. காலம் பாபாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
தன்னை பூஜிப்பவர்களுக்கும் , தியானிப்பவர்களுக்கும், ஸ்மரிப்பவர்களுக்கும் கர்மாவை தாங்கும் சக்தியை அளிப்பதாகவும், அவரே மறைமுகமாக அதை அனுபவிப்பதுமாக பாபா கூறியுள்ளார். "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும். கர்மா, எனது பக்தர்களிடம் சக்தியற்ற நிலையில் இருக்கும்.
ஆகையால் மிக்க விஸ்வாசத்துடன் என்னையே நினைத்துக் கொண்டிருங்கள். காலத்தின் போக்கு கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள். நான் இருக்கிறேன்!. நம்புங்கள்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.