நண்பன் கவிதைகள் - நட்பு கவிதைகள் |
சண்டையிட்டு நம்மை விட்டு விலகிய
பின்னும்
நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின்,
நீ இழந்தது சிறந்த நண்பனை..
நட்பு கவிதைகள்
நமக்காக உயிரயே விடுற அளவுக்கு ஒருத்தன் நம்ம மேல உயிரயே வச்சிருந்தா நிச்சயமா அவன் நமக்கு இரண்டாவது தாய் தான்😊
நட்பு கவிதைகள்
ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும் முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பன் இல்லையெனில் இந்த உலகில் வாழ்க்கை இல்லை.
நட்பு கவிதைகள்
ஒரு தூய அன்பிற்கு அடையாளம் யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக.
நண்பன் கவிதைகள்
ஆயிரம் உறவுகள் என் வசதியை நாடி வந்தாலும், என்னை விட்டு என்றும் விலகாத அறிய பொக்கிஷம் என் நண்பன் நீ.