மங்கல நாட்களில் மாவிலைத் தோரணம் |
மங்கல நாட்களில் மாவிலைத் தோரணம்
வீட்டிலும்,கோவில்களிலும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள்.திருவிழாக்காலங்கள்,திருமணவீடுகளில் எல்லாம் மாவிலைத் தோரணம் கட்டுவது மரபாக அமைந்துள்ளது.இதற்கான காரணம் என்னவென்றால் மாவிளைக்காம்பிலுள்ள பால்,காற்றில் கலந்து மக்கள் சுவாசிக்கும் பொழுது ஒரு கிருமினாசினியாகப் பயன்படுகிறது.ஒருவரிடம் உள்ள நோய்க்கிருமி மற்றறோருவரைத் தொற்றிக் கொள்ளாமலிருக்கவும் பயன்படுகிறது.இதனால் தான் ஹோமக்கலசங்களில் கூட மாவிலைக்கு மத்தியில் தேங்காயை வைக்கிறார்கள்.ஆகவே மங்கல நாட்களில் மாவிலைத்தோரணம் கட்டுவது சிறப்பானதாகும்.