பதினேழாவது அத்தியாயம் |
(ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்)
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத ஸப்ததஷோ அத்யாய:।
ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்
(வாழ்க்கையின் மூன்று கோணங்கள்)
அர்ஜுன உவாச।
யே ஷாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஷ்ரத்தயாந்விதா:।
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:॥ 17.1 ॥
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! யார் சாஸ்திர விதிப்படி அல்லாமல், ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ அவர்களின் நிலை என்ன ? சத்வ குணமா ? ரஜோ குணமா ? தமோ குணமா ?
ஸ்ரீபகவாநுவாச।
த்ரிவிதா பவதி ஷ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா।
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஷ்ருணு॥ 17.2 ॥
ஸ்ரீ பகவான் கூறினார்: மனிதர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள அந்த நம்பிக்கைகள் சாத்வீகம், ராஜசம், தாமசம் என்று மூன்று விதமாக உள்ளது. அதை கேள்.
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஷ்ரத்தா பவதி பாரத।
ஷ்ரத்தாமயோ அயம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:॥ 17.3 ॥
அர்ஜுனா ! இயல்பிற்கு ஏற்பவே மனிதனின் நம்பிக்கைகள் அமைகின்றன. நம்பிக்கைகளின் விளைவே மனிதன். நம்பிக்கைகளே அவனை உருவாக்குகின்றன.
யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா:।
ப்ரேதாந்பூதகணாம்ஷ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:॥ 17.4 ॥
சாத்வீகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ராஜச இயல்பினர் யட்சர்களையும் ராட்சசர்களையும், தாமச இயல்பினர் ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்கள்.