நான்காவது அத்தியாயம் |
(ஞான கர்ம சன்யாச யோகம்)
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத சதுர்தோ அத்யாய:।
ஞான கர்ம சன்யாச யோகம்
(கடமைகளை வேள்வியாக செய்)
ஸ்ரீபகவாநுவாச।
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்।
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே அப்ரவீத்॥ 4.1 ॥
பகவான் சொன்னது: அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஷ்வானுக்கு (சூரியன்) சொன்னேன். விவஷ்வான் மனுவுக்கு சொன்னான் . மனு இக்ஷ்வாவிற்கு சொன்னார்.
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:।
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரம்தப॥ 4.2 ॥
எதிரிகளை வாடுபவனே ! இவ்வாறு பரம்பரையாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். நீண்ட காலம் ஆகிவிட்டதால் இப்போது அந்த யோகம் சீரழிந்துவிட்டது.
ஸ ஏவாயம் மயா தே அத்ய யோக: ப்ரோக்த: புராதந:।
பக்தோ அஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்॥ 4.3 ॥
நீ என்னுடைய பக்தனாகவும், தோழனாகவும் இருக்கிறாய், எனவே பழமை வாய்ந்த அதே யோகத்தை இன்று உனக்கு சொன்னேன். இது மேலானதும் ரகசியமானதும் ஆகும்.
அர்ஜுன உவாச।
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:।
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி॥ 4.4 ॥
அர்ஜுனன் கேட்டது உனது பிறப்பு பிந்தியது, சூரியனுடைய பிறப்பு முந்தியது, அவருக்கு நீ சொன்னதாக கூறியதை எப்படி புரிந்துக்கொள்வது
ஸ்ரீபகவாநுவாச।
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந।
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரம்தப॥ 4.5 ॥
பகவான் சொன்னது அர்ஜுனா ! உனக்கும் எனக்கும் பல பிறவிகள் கடந்து விட்டன. எதிரிகளை வாட்டுபவனே ! நான் அவை அனைத்தையும் அறிவேன், நீ அறிய மாட்டாய் .
அஜோ அபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஷ்வரோ அபி ஸந்।
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா॥ 4.6 ॥
நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களின் தலைவன், இருந்தாலும் சொந்த இயல்பை வசபடுத்தி கொண்டு என் மாயையினால் தோன்றுகிறேன்.